1990-கள் தொடங்கி 2006 வரையிலுமான காலக்கட்டத்தில் இந்தியக் கழுகுகளின் எண்ணிக்கையில் 99% அழிந்து விட்டது. இந்தப் பேரழிவினால் வெறுமையானது நம் வானம் மட்டும் அல்ல; நம் சுற்றுச்சூழலும் தான். மனித இனமும் பெரும் பாதிப்பை சந்திக்கிறது.
மாயாவி கொலைகாரன்
கழுகுகளின் அழிவுக்குக் காரணம் டைக்லோஃபெனாக் என்னும் ஒரு எளிய மாத்திரை. கால்நடைகளுக்கு ஏற்படும் வலி, வீக்கம், காய்ச்சல் ஆகியவற்றிற்குப் பரிந்துரைக்கப்படும் மாத்திரை இது. இற்நத மாடுகளின் உடலில் இந்த மருந்தின் கூறுகள் தங்கி விடுகிறது.
உடலில் டைக்லோஃபெனாக் கூறுகளைக் கொண்ட ஒரு இறந்த மாட்டின் உடல், அதை உண்ணும் பெருமளவு கழுகுகளுக்கு எமனாகி விடுகிறது.
இந்த மருந்து, கழுகுகளுக்கு கடுமையான சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தி சில மணி நேரங்களில் கொன்று விடுகின்றன.
தடையும், தொடர்ந்த ஆபத்தும்
2006-ல், இந்திய அரசாங்கம் டைக்லோஃபெனாக்கிற்கு தடை விதித்தது.
ஆனாலும், சட்டத்துக்குப் புறம்பாக, இந்த மருந்து, சிலரால் பயன்படுத்தப்பட்டு வந்தது.
அது மட்டுமல்லாமல், டைக்லோஃபெனாக் போல கழுகுகளுக்கு மரணத்த்தை ஏற்படுத்தும் மாட்டு மருந்துகளான Ketoprofen மற்றும் Aceclofenac, ஆகிய இரண்டும் 2023-ல் தான் தடை செய்யப்பட்டன.
தொடர் விளைவு ஏற்படுத்திய மாபெரும் அழிவு – கழுகு எண்ணிக்கை குறைவால் 5 இலட்சம் மனித உயிர்கள் பலி
கழுகுகளின் எண்ணிக்கை குறைவு தொடர்பாக 2008-ல் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று வெளியிட்ட அதிர்ச்சிகரமான தகவல்கள்:
- கழுகுகளின் எண்ணிக்கையில் ஏற்பட்ட வீழ்ச்சி, இறந்த விலங்கு உடல்களை உண்ணும் காட்டு நாய்களின் (feral dogs) எண்ணிக்கையை பெருமளவு அதிகப்படுத்தியது.
- மனிதர்களுக்கு மத்தியில் அதிகமாக ரேபீஸ் தொற்று பரவுதல்.
- பல்வேறு நோய்த்தொற்றுகளினால் 5 இலட்சம் மக்கள் இந்தக் காலக்கட்டத்தில் இறந்தனர்.
சுற்றுச்சூழலுக்கு கழுகுகள் ஆற்றும் பெரும் பங்கு
இறந்த உடல்களை உண்பதன் மூலம் கழுகுகள் நம் சுற்றுச்சூழலுக்குப் பெரும்பங்காற்றுகின்றன
இறந்த உடல்களை துரிதமாக உண்டு சுத்தம் செய்து விடும் கழுகுகள், பாக்டீரியா உள்ளிட்ட தொற்றுகள் பரவாமல் தடுக்கின்றன.
கழுகுகளின் வயிற்றில் உள்ள அமிலம் மிகவும் வ்லிமையானதால், ஆந்த்ராக்ஸ், ரேபீஸ் உள்ளிட்ட கிருமிகளை பரவ விடாமல் அழித்து விடுகிறது.
தங்களுடைய அற்புதமான நோய் எதிர்க்கும் திறனால், கழுகுகள் கடுமையான விளைவுகளையும் உயிரிழப்பையும் பிற விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் ஏற்படுத்தக் கூடிய நோய்க்கிருமிகளை அழித்து விடுகிறது.
நாம் செய்யக் கூடியது என்ன?
மனிதர்களாகிய நாம் அளிக்கும் ஒவ்வொரு சிறு பங்களிப்புமே மாபெரும் மாற்றத்திற்கான உந்துசக்தியாக விளங்கும்.
- விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
- தீங்கு விளைவிக்கக் கூடிய அனைத்து மருந்துகளையும் தடை செய்ய வலியுறுத்துதல்
- உள்ளூரில் இயங்கும் கழுகுகள் பாதுகாப்பு அமைப்புகளோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு இயன்ற பங்காற்றுதல்
நீங்கள் பறவைகளை நேசிப்பவராக இருந்தால், இந்தப் பயணம் கண்டிப்பாக உங்கள் மனதைக் கொள்ளை கொள்ளும்.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருப்பது நம் உடல்நலத்திற்கு நன்மை தருவதோடு நாம் நம்பியிருக்கும் இயற்கையின் சமநிலையை பாதுகாக்கவும் உதவும்.
இன்று நான் பரிந்துரை செய்ய விரும்பும், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற , நல்ல பயன்பாடுள்ள, அழகான மூன்று பொருட்கள்:
Coconut Shell Cups and Bowls
அற்புதமான பயன்பாடு; பார்க்கவும் மிக அழகாக இருக்கிறது.
Coconut Shell Pencil, Pen Stand
15 முதல் 20 பென்சில்கள் வரை வைக்கலாம் போலிருக்கிறது. அழகான வேலைப்பாடு.
Glass Jar With Bamboo Lid
எறும்பு புகாமல், உணவுப் பொருள்களை பாதுகாப்பாக வைக்க ஏற்ற டப்பாக்கள்.
அமேசான் அஃபிலியேட் என்கிற முறையில் இந்தப் பதிவில் இடம் பெற்றிருக்கும் இணைப்புகள் மூலம் நீங்கள் வாங்கக் கூடிய பொருட்களுக்கு, உங்களுக்கு எந்தவித கூடுதல் செலவும் இல்லாமல், எனக்கு ஒரு சிறு தொகை கமிஷனாகக் கிடைக்கக் கூடும்.

இரமா தமிழரசு
வணக்கம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். எங்களுடைய மற்ற வலைப்பக்கத்தையும் YouTube channel-களையும் பார்க்குமாறு உங்களை வரவேற்கிறோம்.
https://voiceofapet.blogspot.com/
https://www.youtube.com/@PetsDiaryPages
https://www.youtube.com/@letnaturelive1 .