உடல் மன ஆரோக்கியம்

மூலிகை உலகம்

மூலிகை என்றாலே ஏதோ நாட்டு மருந்து கடையில் தொங்கவிடப்படும் பொருளாகவும், உடலில் பிரச்சினை ஏற்பட்டால் மட்டுமே பயன்படுத்தக் கூடியது என்றும் இருந்த கருத்தில் சமீப காலமாக மாற்றம் ஏற்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலின் போது நிலவேம்பு அதிகமாகப் பயன்பட்டது போல், கொரோனாவின் போது கபசுர குடிநீர் பயன்பாடு அதிகரித்துள்ளது. குறிப்பாக,  கொரோனா அவதாரம் எடுத்த பின், மூலிகைகளை எப்படி எல்லாம் உணவில் சேர்க்கலாம் என்று ஒரு பட்டியலே உருவாகியிருக்கிறது.

மூலிகைகளில் உள்ள compounds நோய் தீர்க்கும், நோய் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் மிக்கவை. தொடர்ந்து மூலிகைகளை பயன்படுத்தும் போது சளி, காய்ச்சல் தொடங்கி இருதய நோய் மற்றும் பல தீவிர நோய்கள் வரை ஏற்படாமல் தவிர்க்கலாம்.

நம் முன்னோர்களின் உணவு முறை பழக்கத்தில் மூலிகைக்கு என்று தனி இடம் கிடையாது; மூலிகையே உணவின் ஒரு பகுதியாக இருந்தது. மூலிகையின் பெருமைகளை உணர்ந்த நம் முன்னோர்கள் இயல்பாகவே அவற்றை உணவாக எடுத்தனர்.  ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்று ஆரோக்கியமான உணவின் மகத்துவத்தையும், சரியான உணவை உண்ணும்போது மருந்தே தேவைப்படாது என்பதையும் சித்தர்கள் வெகு எளிமையாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இப்பகுதியில், தொடர்ந்து வரும் நாட்களில் நாம் மூலிகைகள் பற்றியும், அவற்றின் பயன்பாடு, அவற்றை எவ்வாறு உணவில் சேர்ப்பது மற்றும் மூலிகைக் குடிநீர் பற்றியும் பார்க்கலாம்.

மஞ்சள் பலன்கள் மற்றும் மஞ்சள் உணவுகள்

சமையலறையில் அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்றான மஞ்சளுக்கு இப்போது உலகளவில்… 

மேலும் படிக்க>> 

துளசியின் பலன்கள் மற்றும் துளசி உணவுகள்

சமையலறையின் ராணி மஞ்சள் என்றால் தோட்டத்து ராணி துளசிதான்; அது மட்டுமல்ல,மூலிகைகளுக்கே …

மேலும் படிக்க>>> 

இஞ்சியின் அற்புத  மருத்துவ பலன்கள்

நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையை எண்ணி வியக்காமல் இருக்க முடியாது. உண்ட உணவு மற்றும் …

மேலும் படிக்க>>>

கற்பூரவல்லியின் பலன்கள்

துளசிச் செடிக்கு அடுத்தப்படியாக வீட்டுத் தோட்டங்களில் பிரதானமாக இடம்பெற்றிருப்பது ஓமவல்லி எனப்படும்…

மேலும் படிக்க>>

இரணகள்ளியின் பலன்கள்

கேட்ட நொடியில் விந்தையான பெயராகத் தோன்றும் இரணகள்ளியின் மருத்துவ குணங்கள் வியப்பிற்கெல்லாம் அப்பாற்பட்டவை. இலைகளின் நுனிகளிலிருந்து புதுத்…

மேலும் படிக்க>>

தூதுவளையின் பலன்கள்

சமீப நாட்களாக இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த Professor Edward Anderson இட்லி பிரியர்களிடம் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார். “உலகத்தின் அலுப்பான விஷயங்களில் ஒன்று இட்லி”…

மேலும் படிக்க>>

புதினாவின் பலன்கள்

வீட்டில் மிக மிக எளிதாக வளரக் கூடிய மூலிகைச் செடிகளில் புதினாவும் ஒன்று. சொல்லப் போனால் புதினா உங்கள் தோட்டத்தையே ஆக்கிரமிக்கும் அளவுக்கு வளரக் கூடியது. புதினாவில் 600-க்கும் மேற்பட்ட வகைகள்…

மேலும் படிக்க>>

கொத்துமல்லியின் பலன்கள்

கடையிலிருந்து வீட்டிற்குத் திரும்பும் போது, பை நிரம்ப காய்கறிகள் இருந்தாலும் அதற்கெல்லாம் மேல் கொத்துமல்லியும் கறிவேப்பிலையும் இருந்தால்தான் மனம் நிறைவடைகிறது. இவை வெறும் சுவை கூட்டிகள்…

மேலும் படிக்க>>

வேப்ப மரத்தின் பயன்கள்

21-ம் நூற்றாண்டின் மரமாக (Tree of the 21st century) ஐநா-வால் அறிவிக்கப்பட்ட வேப்ப மரம், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்ததும்,  மனித குலத்தின் மிகத் தொன்மையான மருத்துவங்களில் ஒன்றுமான சித்த மருத்துவத்தில் …

மேலும் படிக்க>>

மிளகின் அற்புத பலன்கள்

“பத்து மிளகு கையில் இருந்தால் பகைவன் வீட்டிலும் விருந்துண்ணலாம்” என்ற பழமொழி மூலம் நம் முன்னோர்கள் மிளகின் மகத்துவத்தை போகிற போக்கில் எடுத்துக் கூறியிருக்கிறார்கள் என்பது …

மேலும் படிக்க>>

அதிமதுரத்தின் அற்புத பலன்கள்

சிறு குழந்தைகள் உள்ள வீட்டின் சமையலறையில் தவறாது இடம் பெறும் முக்கிய மூலிகைகளில் ஒன்று அதிமதுரம். அதிஅற்புதமான மருத்துவ குணங்கள் நிறைந்த அதிமதுரம் பல்வேறு கலாச்சாரங்களால்…

மேலும் படிக்க>>>

Kuppaimeni 2 cropped
குப்பைமேனியின் அற்புத பலன்கள்

பாரம்பரிய மருத்துவத்தில் இன்றியமையாத இடம் பெற்ற மூலிகைகளில் ஒன்று குப்பைமேனி. இது ஆங்கிலத்தில் Acalypha Indica, Indian Nettle மற்றும் Indian copperleaf என்று …

மேலும் படிக்க>>

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்